All About Madurai Now AAM on your Mobile

 All About Madurai » Madurai Chat - அரட்டை அரங்கம்
 அரட்டை அரங்கம்

Username: Remember Me?
Password:


Post new topic Reply to topic
 Page 2 of 7  [ 99 posts ]  »
March 10th, 2010, 4:20 pm Top
Active Member
Joined: February 26th, 2010, 7:33 am
Posts: 93
Has thanked: 0 time
Been thanked: 0 time


^^ Same news @ Dinamalar Epaper

Image


Offline
Profile 
 

#

March 17th, 2010, 8:15 am Top
New Member
Joined: March 2nd, 2010, 10:31 pm
Posts: 17
Has thanked: 0 time
Been thanked: 0 time


புதுப்பொலிவு பெற்றிருந்த மதுரை திருமலை நாயக்கர் மகால், சினிமா படப்பிடிப்புகளால் சிதைக்கப்படுகிறது. பார்வையாளர்கள் அவதிக்குள்ளாயினர்.தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமலை நாயக்கர் மகால், ஆறு மாதங்களுக்கு முன், மூன்று கோடி ரூபாயில் புனரமைப்பு செய்யப்பட்டது. இதை பயன்படுத்தி, பல படப்பிடிப்பு குழுவினர் அடிக்கடி மகாலில் முற்றுகையிடுகின்றனர். இரண்டு நாட்களாக "விடியல்' படப்பிடிப்பு குழுவினர் மகாலின் உட்புறம் உள்ள அழகுகளை சிதைத்து, அவர்களுக்கு ஏற்றவகையில் வடிவமைத்துள்ளனர். இதனால் மகாலில் பாரம்பரிய வரலாற்று பெருமைகள் மறைக்கப்பட்டும், கட்டுமான அழகுகளை ரசிக்க முடியாமல் பார்வையாளர்கள் அதிருப்திக்குள்ளாகினர்.


அனுமதி மர்மம்: மகாலின் கீழ்பகுதியில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். நபர் ஒருவருக்கு பத்து ரூபாய் நுழைவுக்கட்டணம். ஆனால் மேல்பகுதியில் பாதுகாப்பு காரணங்களை காட்டி அங்கு பார்வையாளர்கள் செல்வதற்கு அனுமதி அளிப்பது இல்லை. ஆனால் இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள், கட்டமைப்பு வசதிகளை செட்டிங் மூலம் மாற்றியமைத்து, படப்பிடிப்பை நடத்துகின்றனர். படப்பிடிப்புக்கு தொல்லியல் துறை நாள் ஒன்றிற்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் அனுமதி இல்லாத இடங்களில் தான் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த பகுதிக்கு செல்ல முயன்ற பார்வையாளர்களுக்கும், படப்பிடிப்பு குழுவினருக்கும் தகராறுகள் ஏற்பட்டன.


அறிவிப்பு இல்லாத படப்பிடிப்பு: சுற்றுலா பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கு, சில நாட்களுக்கு முன்பே பார்வையாளர்கள் அறியும் வகையில், தகவல் பலகை வைக்கப்படும். இது தொடர்பாக எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. அதே போல் டிக்கெட் கொடுக்கும் போது, எந்தெந்த பகுதிகளுக்கு மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு என விளக்கி சொல்வது நல்லது. ஆனால் அந்த நடைமுறையும் இல்லை.


நடவடிக்கை எடுக்கப்படுமா: மதுரையில் பார்வையாளர்களை பெரிதும் கவரும் இந்த மகாலுக்கு, பல ஆயிரம் மைல் தூரங்களை கடந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை தொல்லியல் துறை ஏற்படுத்தாமல், சில ஆயிரங்களுக்காக, மகாலின் பெருமையை சிறுமைப்படுத்தும் பணியினை செய்கிறது. மகாலுக்கு வரும் பார்வையாளர்களுக்கு ஒரு சட்டம், படப்பிடிப்பு குழுவினருக்கு ஒரு சட்டம் என ஏமாற்று வித்தைகாட்டும், இந்த நிலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். படப்பிடிப்புகளுக்கு நிரந்தர தடை விதித்தால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைவார்கள். பாரம்பரியமாக நாம் பாதுகாத்து வரும் பொக்கிஷமான மகால், மதுரையின் அடையாள சின்னமாக பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு.


ஏமாற்றமே மிஞ்சியது : மதுரைக்கு நேற்று வந்த சுற்றுலாப்பயணிகள் சிலர் கருத்து:* சீனிவாசன் (ஐதராபாத்): பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வந்த நாங்கள், மகாலில் தான் ஏமாற்றம் அடைந்தோம். சுற்றுலாத்துறை சார்பில் வெளியிட்டுள்ள கையேட்டில், மகால் பெருமைகள் அருமையாக இருந்தன. ஆனால் இங்கு நடக்கும் சூட்டிங் காரணத்தால் பார்க்க முழுமையாக பார்க்கவும், ரசிக்கவும் முடியவில்லை.
* கிறிஸ்டோபர் (புதுக்கோட்டை): எங்கள் பள்ளிக் குழந்தைகளுடன் இங்கு வந்தோம். வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் படப்பிடிப்பு குழுவினரின் வாகனங்களே பெருளவில் இருந்தன. அப்போதே மகாலின் பெருமைகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியாது, என உணர்ந்தோம். அது போலவே படப்பிடிப்பு குழுவினர்களால் பெரும் இடையூறுகளே இருந்தன.
* ராமநாதன் (மதுரை): பல ஆண்டுகளாக மகால் பராமரிப்பு பணிகளை தொல்லியல் துறை செய்யவில்லை. மக்கள் கோரிக்கைகளை ஏற்று மகால் புதுப்பிக்கப்பட்டதும், சினிமா குழுவினர் வந்து அதனை சேதப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு நிரந்த தடை விதிக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதற்கு, சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணிகளை செய்ய வேண்டும்.

Thanks to Dinamalar.


Offline
Profile 
 

#

March 25th, 2010, 1:51 pm Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 10:58 pm
Posts: 228
Has thanked: 1 time
Been thanked: 0 time


Very Very HOT Madurai ! :( :o :shock: :oops: :crazy: :sick:
Image


Offline
Profile 
 

#

April 10th, 2010, 12:11 pm Top
Advanced Member
User avatar
Joined: February 27th, 2010, 6:36 pm
Posts: 1669
Location: Madurai
Has thanked: 23 times
Been thanked: 39 times


Image

Madurai transportation gets poor and poor. :bash: .

Is it possible to introduce Metro Train in Madurai ?


Offline
Profile YIM 
 

#

April 26th, 2010, 5:09 pm Top
Advanced Member
User avatar
Joined: February 27th, 2010, 6:36 pm
Posts: 1669
Location: Madurai
Has thanked: 23 times
Been thanked: 39 times


செயற்கை புல்தரை ஹாக்கி மைதானம் அமையுமா? மதுரை பயிற்சி மையத்துக்கு மூடுவிழா :bash:

தேசிய அளவில் வீரர்களை உருவாக்கும் மதுரை ஹாக்கி மைதானத்துக்கு செயற்கை புல்தரை அமைக்க, இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மதுரை எல்லீஸ்நகரில் இரண்டரை ஏக்கர் இடத்தில் 60 லட்ச ரூபாய் செலவில், ஐந்தாண்டுகளுக்கு முன் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டது. அப்போதிருந்து தேசிய அளவிலான போட்டிகளும், மாநிலப் போட்டிகளும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மைதானத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே கூடைப்பந்து மைதானமும் உள்ளது.
இரண்டு காவலாளிகள், இரண்டு 'மார்க்கர்கள்' பணியில் இருந்தனர். தற்போது ஒரு காவலாளியும், 'மார்க்கரும்' மட்டுமே உள்ளனர். இதனால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி உள்ளே நுழைந்து தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். காலையில் மைதானத்தில் மதுபாட்டில்கள் சிதறி கிடக்கின்றன. ஒரு காவலாளி மட்டும் இருப்பதால், உள்ளே நுழையும் அன்னியர்களை விரட்ட முடியவில்லை. தேசிய, மாநிலப் போட்டிகள் நடக்கும் போது பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க வசதியில்லை. மைதானத்தை ஒட்டியுள்ள, பயன்படாத ரோட்டின் பின்பகுதியை இணைத்து 'காலரி' அமைத்தால், பார்வையாளர்கள் அமர்ந்து ரசிக்கலாம். கழிப்பறைகள் இருந்தாலும், தண்ணீர் வசதி இல்லாததால் வீரர்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துகின்றனர். மைதானத்தின் மேற்பகுதியில் தற்போது குறுமணல் கொட்டப்படாததால் வீரர்கள் விளையாடும் போது சிரமம் உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.,) உறுப்பினர் செயலராக இருந்த அதுல்யமிஸ்ரா, 2007ம் ஆண்டில் ஹாக்கி வீரர்களுக்கான சிறப்பு மையத்தை திறந்து வைத்தார். அதற்கான கல்வெட்டு மட்டும் இருக்கிறது. மையம் செயல்படவில்லை. இதன்கீழ் வீரர்களுக்கு காலை, மாலை இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. வந்து செல்வதற்கான போக்குவரத்து கட்டணம், சிற்றுண்டி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் வழங்கப்படவில்லை. பயிற்சியை எதிர்பார்த்த வீரர்களின் கனவுகள் கானல் நீராகி விட்டது.சென்னை, திருச்சி, திருநெல்வேலியில் விளையாட்டு விடுதியும், அகாடமியும் உள்ளது. விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து கட்டணம், உணவு, தங்குமிடத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஹாக்கியில் மதுரை வீரர்கள் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் இங்கு அகாடமியும் இல்லை. அமைக்கப்பட்ட சிறப்பு மையமும் செயல்படவில்லை.

எஸ்.டி.ஏ.டி., யின் கீழ் ஹாக்கிக்கு தனிப்பயிற்சியாளர் நியமிக்கப் பட்டுள்ளார். ஆனால் எல்லீஸ்நகர் மைதானத்தை கண்காணிப்பதற்கு யாருமில்லை. தமிழகத்தில் சென்னையில் இரண்டு செயற்கை புல்தரை மைதானங்களும், திருநெல்வேலி, திருச்சியிலும் மைதானம் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தேசியளவில் வீரர்களை உருவாக்கும் மதுரையில் மட்டும் செயற்கை புல்தரை அமைக்கப்படவில்லை. மைதானத்துக்கு தனியாக கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும். இரண்டு காவலாளிகளை பணியில் அமர்த்தவேண்டும். மைதானத்தைச் சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி செய்கின்றனர். காலை வேளையில் 'மினி' ரேஸ்கோர்ஸ் மைதானத்தைப் போல பரபரப்புடன் செயல்படும் மைதானத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.


Offline
Profile YIM 
 

#

May 3rd, 2010, 5:54 pm Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 10:58 pm
Posts: 228
Has thanked: 1 time
Been thanked: 0 time


மதுரை மாசடைவதை தடுக்க டீசல் ஆட்டோக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.<br>மதுரையில் சுமார் 10ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. அதில், 6ஆயிரத்து 43ஆட்டோக்கள்&nbsp; மட்டும் பெர்மிட் உள்ளவை. கடந்த 10ஆண்டுகளாக மதுரையில் புதிதாக பெர்மிட் வழங்க வில்லை. இருப்பினும் 10ஆண்டுகளில் ஆட்டோக்களின் எண்ணிக்கை 4ஆயிரம் அதிகரித்துள்ளது. அவை அனைத்தும் பெர்மிட் இல்லாதது.

மொத்த ஆட்டோக்களில் 80சதவீதம் டீசல் ஆட்டோக்களாகும். கரும் புகையை அளவுக்கு அதிகமாக வெளியிடும் டீசல் ஆட்டோக்களால் நகரில் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது. இதை தடுக்க தற்போது காஸ் ஆட்டோக்களுக்கு மட்டுமே பெர்மிட் வழங்கப்படுகிறது.

கடந்த 3மாதத்தில் மதுரையில் 3ஆர்டிஓ அலுவலக பகுதியில் சுமார் ஆயிரம் எல்பிஜி ஆட்டோக்களுக்கு புதிய பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. 2ஆயிரம் பேருக்கு மேல், பெர்மிட் வழங்குவதற்கான செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்கிய பிறகு பெர்மிட் வழங்கப்படும்.

புதிய பெர்மிட் வழங்கப்பட்ட பிறகு, பெர்மிட் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும், டிக்கெட் போட்டு ஆட்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்களின் பெர்மிட் ரத்து செய்யப்படும் என மதுரை கலெக்டராக மதிவாணன் இருந்த போது கூறியிருந்தார். சென்னையை போல் மதுரை மாவட்டத்திலும் டீசல் ஆட்டோக்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது புதிதாக எல்பிஜி ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்குவதால் டீசல் ஆட்டோக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பு டீசல் ஆட்டோக்களை எல்பிஜி ஆட்டோவாக மாற்ற காலக்கெடு வழங்கலாம். அந்த காலக்கெடுவுக்கு பிறகு டீசல் ஆட்டோக்கள் இயக்க தடை விதித்து மதுரையை மாசற்ற நகராக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

விபத்துகள் அதிகரிப்பு:

மதுரையில் டிரைவருடன் சேர்ந்து 3பேர் மட்டுமே செல்ல வேண்டிய ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோவாக மாற்றப்பட்டு டிக்கெட் போட்டு பயணிகள் ஏற்றப்படுகின்றனர். அதிக ஆட்களுடன் அதிவேகத்தில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள் விபத்தில் சிக்குகின்றன. நேற்று புதூரில் டூவீலரில் வந்த வெள்ளைச்சாமி, அவர் மனைவி செல்வி, மகள் பிரியா மூவர் மீதும்&nbsp; ஷேர்ஆட்டோ மோதியது. மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் மகுடபதி கூறுகையில், Ôஅதிக ஆட்களை ஏற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளோம். தொடர் சோதனைகள் மூலம் நடவடிக்கைகள் மேலும் வேகப்படுத்தப்படும் என்றார்.

Not only these share auto are making air dirty but also their driving is very very worst.... They stop their auto where ever peoples are standing... we never know when they stop and when the start going... Because of competition they drive their auto in jet speed..

Sorry, We should : firing: them!


Offline
Profile 
 

#

May 7th, 2010, 4:07 pm Top
Active Member
Joined: February 24th, 2010, 9:30 pm
Posts: 55
Has thanked: 0 time
Been thanked: 0 time


Asin( :D ) traveled in bullock cart to Madurai Airport. This interesting incident took place near Madurai. Asin is pairing with Vijay in the film directed by Siddhique. After completing the shooting of the film, Asin decided to go to Mumbai.

She was traveling by car to the airport. On the way, a bullock cart was standing. Her friends asked her whether she had the guts to travel by bullock cart. Asin said,” Why not?” and asked the bullock cart driver whether it was possible for him to give her a lift. Seeing Asin, the driver was overjoyed and nodded. Asin along with her friends jumped into the cart and rode the cart.


People who saw Asin on the way were very happy. Some of them asked for autographs and Asin stopped the cart and obliged everyone. After traveling for about half an hour, she got into her car and drove to the airport. Her friends said that there were enough time to go to airport and because of this they had insisted Asin to ride in the bullock cart.

http://thebollywoodactress.com/actress- ... i-airport/


Offline
Profile 
 

#

May 11th, 2010, 10:42 am Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 10:58 pm
Posts: 228
Has thanked: 1 time
Been thanked: 0 time


Image


Offline
Profile 
 

#

May 31st, 2010, 4:23 pm Top
Active Member
Joined: February 24th, 2010, 9:30 pm
Posts: 55
Has thanked: 0 time
Been thanked: 0 time


மதுரையின் மைய பகுதியில் குறுகலான ரோடுகளாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளன. வெளியூர் வாகனங்கள் மதுரையை எளிதாக கடந்து செல்ல பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. நகரின் விரிவாக்கத்தால் இப்போது பைபாஸ் ரோட்டுக்கும் ஒரு பைபாஸ் ரோடு தேவைப்படுகிறது. அந்தளவு போக்குவரத்து அதிகரித்து இருந்தாலும், எதையும் கண்டு கொள்ளாத மக்களால், எத்தனையோ ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதையை ஆக்கிரமித்து மின்கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகள், வாகனங்கள், பழ, மீன் கடைகள் என எண்ணற்றவை இடம் பிடித்துள்ளன. இதனால் சீரான வாகன ஓட்டம் தடைபடுகிறது. இதில் வேடிக்கை, ஆக்கிரமிப்பாளர்களே வாகனத்தில் பயணிக்கும்போது, ஊர்ந்து செல்லும் வாகனங்களின் ஓட்டுனர்களை சபிப்பதுதான். தங்கள் நடவடிக்கையே இதற்கு காரணம் என யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. இந்த பைபாஸ் ரோட்டின் இன்றைய நிலையோ, அலங்கோலமாக்கப்பட்டு கிடக்கிறது. இந்த ரோட்டை அகலப்படுத்த மத்திய அரசின் ரோடு நிதியின் கீழ் சமீபத்தில் ரூ. 70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இருபக்கமும் தலா இரண்டரை மீட்டர் அகலத்தில் தார் அமைக்கப்பட உள்ளது. அதிக நிதிஒதுக்கிவிட்டோம் என அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் செய்வதைவிட, அந்த ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்றி, அழகுபடுத்தி, வாகனங்களின் போக்குவரத்தை சீராக்க வேண்டியதே முதல் கடமையாகும்.

Image
ரோட்டோரம் வாகனங்கள் நின்றாலே ஆபத்து என்கிறபோது மின்கம்பங்கள் ஆக்கிரமித்தால் அடுக்குமா -சொக்கலிங்கநகர் :bash:

Image
சந்திப்புப் பகுதியில் சகட்டு மேனிக்கு பிளக்ஸ் போர்டு, கார்கள் ஆக்கிரமித்தால் வாகனங்கள் எப்படித்தான் வளைந்து திரும்புமாம். - காளவாசல் : firing:

Image
மக்கள் வசதிக்காக இலவச கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால் யாருடைய வசதிக்காகவோ அதன் அருகே ஆக்கிரமித்து கடை அமைக்கப்பட்டுள்ளது. - வசந்தநகர் ரவுண்டானா அருகில் :bash:

Image
தள்ளுவண்டி வியாபாரம் போய், குளிர்சாதன வசதியுடன் பழக்கடைகளும் ஆக்கிரமித்து விட்டனவே. - பொன்மேனி பஸ் ஸ்டாப் அருகே :wallbash:

Image
மார்க்கெட்டுகளில் இடம் கிடைக்காமலா ரோட்டில் மீன்கடையை அமைத்துள்ளனர். - எஸ்.பி.ஐ., காலனி எதிரில் :lolno:


Offline
Profile 
 

#

June 7th, 2010, 8:01 am Top
Active Member
Joined: February 24th, 2010, 9:30 pm
Posts: 55
Has thanked: 0 time
Been thanked: 0 time


பஸ் ஸ்டாப்புகளில் டீசல் ஆட்டோக்களை நிறுத்துவதால் பயணிகள் டவுன் பஸ்களில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.பெரியார் பஸ்ஸ்டாண்டு, மாட்டுத்தாவணி, கீழவாசல் மற்றும் தெற்குவாசலில் இருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடுவரை டீசல் ஆட்டோ போக்குவரத்து உள்ளது. டிரைவிங் லைசென்ஸ், ஆட்டோ பெர்மிட், சீருடை இல்லாமல் குடிபோதையில் ஆட்டோ ஓட்டுவது என விதிமுறை மீறல்கள் நடக்கின்றன. டிரைவர்களுக்குள் ஏற்படும் போட்டியால், நினைத்த இடத்தில் வளைப்பது, திடீரென பிரேக் போடுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ஏற்படும் விபத்துகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதை தட்டிக் கேட்பவர்களை தாக்குவதும் அடிக்கடி நடக்கிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்களை தட்டிக்கேட்கும் பெண்களை திட்டுகின்றனர். அவனியாபுரம் போலீசார் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது, ஆட்டோ டிரைவர்களுக்கு சாதகமாக உள்ளது. பயணிகள் அவதி: பஸ்ஸ்டாப்களை மறித்து ஆட்டோக்களை நிறுத்துவதால், பயணிகள் பஸ்களில் ஏற சிரமப்படுகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துகளை அரசு பஸ்டிரைவர்களோ, போக்குவரத்து கழக அதிகாரிகளோ கண்டுகொள்வது இல்லை. டூ-வீலரில் செல்பவர்களிடம் லைசென்ஸ் சோதனை செய்வதுபோல் ஆட்டோ டிரைவர்களிடம் சோதனை செய்தால், டீசல் ஆட்டோக்களை கட்டுப்படுத்தலாம்.
: firing:


Offline
Profile 
 

#

June 30th, 2010, 1:05 pm Top
Advanced Member
User avatar
Joined: February 27th, 2010, 6:36 pm
Posts: 1669
Location: Madurai
Has thanked: 23 times
Been thanked: 39 times


மதுரையில் டீசல் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கும் கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், புதிதாக டீசல் ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் சுமார் 10ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. இதில் 80 சதவீதம் டீசல் ஆட்டோக்களாகும். கரும் புகையை அளவுக்கு அதிகமாக வெளியிடும் டீசல் ஆட்டோக்களால் நக ரில் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது. மதுரையில் 10 ஆண்டுக்கு பிறகு ஜனவரி முதல் புதிய பெர்மிட் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் டீசல் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கும் பொருட்டு, காஸ் மற்றும் பெட்ரோல் ஆட்டோக்களுக்கு மட்டுமே பெர்மிட் வழங்கப்பட்டது. பெர்மிட் வழங்கிய பிறகு சென்னையை போல் மதுரையிலும் டீசல் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்படும் என அப்போதைய கலெக்டர் மதிவாணன் அறிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆட்டோ பெர்மிட் வழங்க ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மே 13ல் அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் சென்னையில் மட்டும் காஸ் ஆட்டோக்களுக்கும், பிற பகுதிகளில் எல்லா விதமான ஆட்டோக்களுக்கும் பெர்மிட் வழங்க ஆர்டிஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுபடி டீசல் ஆட்டோக்களுக்கும் பெர்மிட் வழங்கப்பட உள்ளது. டீசல் ஆட்டோக்களுக்கு பெர்மிட் கேட்டு பலர் ஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பித்து வருகின்றனர். <br>மதுரையில் அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கி உயிர்களை பலிவாங்குவதில் ஷேர் ஆட்டோக்கள் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் புதிதாக டீசல் ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது மக்களிடம் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. :bash:


Offline
Profile YIM 
 

#

July 7th, 2010, 2:05 pm Top


ஷேர் ஆட்டோ வேன் மீது மோதியதில் 11 பேர் காயம்


மதுரை அருகே விதிமுறையை மீறி, அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவ, மாணவியரை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த ஷேர் ஆட்டோ, மாடு மீது மோதாமல் இருக்க, வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்தனர். ஒத்தக்கடை அருகே புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த மாணவ, மாணவியர், சில கி.மீ., தூரத்தில் உள்ள திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். "பள்ளிக்கு வேகமாக செல்ல வேண்டும்' என்று பஸ் பயணத்தை தவிர்க்கும் இவர்கள், ஷேர் ஆட்டோவில் பயணிக்கின்றனர்.

டிரைவருடன் சேர்த்து 4 பேர் மட்டுமே செல்ல வேண்டிய இந்த டீசல் ஷேர் ஆட்டோவில், நேற்று காலை 8 மணிக்கு 11மாணவர்கள் பள்ளிக்கு புறப்பட்டனர். போக்குவரத்து அதிகம் இல்லாத திருவாதவூர் ரோட்டில், மாணவர்களின் உயிர்களை பற்றி கவலைப்படாத ஷேர் ஆட்டோ டிரைவர் ஆண்டிச்சாமி(42) அதிவேகமாக ஓட்டினார். இடையப் பட்டி விலக்கு அருகே வந்தபோது, மாடு ஒன்று ரோட்டின் குறுக்கே புகுந்தது.அதன் மீது மோதாமல் இருக்க, வலது பக்கம் ஷேர் ஆட்டோவை திருப்பிய ஆண்டிச்சாமி, எதிரே வந்த வேன் மீது மோதினார். இதில் மாணவர்கள் கணேஷ்(10), பிரவீன்குமார்(12), ஆண்டிச்சாமி(14), நிஜாமுதீன் (12), தங்கவேலு(13), ஆசாத் பனீஷா(14), மோனிகா(11), ஷகீராபானு(13), ஆயம்மாள்(14), முத்து (13), தங்கபாண்டி(14) ஆகியோர் காயமடைந்தனர். டிரைவர் ஆண்டிச்சாமியும் காயமடைந்தார்.அரசின் இலவச "108' ஆம்புலன்சில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.மாவட்ட எஸ்.பி., மனோகர் கூறியதாவது :டிரைவர் மீது அதிவேகமாக ஓட்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விதிமுறை மீறி, அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்ததற்காகவும் நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற பகுதிகளில் இதேபோல் விதிமுறை மீறல் நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த பகுதி போலீசாருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது, என்றார்.


 

#

July 12th, 2010, 5:21 pm Top


மதுரை செல்லூர் தத்தனேரி காமாட்சிநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீரபாண்டி. இவருக்கு நேற்று பிறந்தநாள். இதைக் கொண்டாட வீரபாண்டி, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான ஆட்டோ டிரைவர்கள் பிரம்மானந்தம், கிருஷ்ணகுமார், செல்வம், சவுந்திரபாண்டி, காந்தியை ஒரு ஷேர் ஆட்டோவில் ஏற்றி, சினிமா பார்ப்பதற்காக குரு தியேட்டர் நோக்கி வந்தார். டிரைவர் செந்தில் ஓட்டினார். பகல் 2.30 மணிக்கு மதுரை-திண்டுக்கல் ரோடு மேம்பாலம் அருகே வந்தபோது நிலைதடுமாறி, எதிரே ஒர்க்ஷாப்பில் நின்றிருந்த தனியார் மீட்பு வாகனம் மீது ஷேர் ஆட்டோ மோதி, கவிழ்ந்தது. ஷேர் ஆட்டோவிலிருந்த 7 பேரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் பிரம்மானந்தம் இறந்தார். தல்லாகுளம் போக்குவரத்துப் பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


Quote:
This time not public... Its one of the எமன் alias ஷேர் ஆட்டோ டிரைவர்
RIP


 

#

August 26th, 2010, 1:38 pm Top


We should : firing: them! or law against them should be hard!!
Image


 

#

August 27th, 2010, 9:41 am Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 3:26 pm
Posts: 133
Has thanked: 0 time
Been thanked: 0 time


Hello Friends!

Image

For the first time in the history of the LG ICC Awards, fans will have the opportunity this year to have their say on one of the winners. Through an online voting process, supporters from across the globe will be able to celebrate the contribution of one of the game's international superstars through the presentation of a unique cricket award.

In making their choice for who they believe should win the LG People's Choice Award, fans are asked to consider the player who during the voting period (24 August 2009-10 September 2010) has had an all-round impact on the sport. Not only will the winning player have shown themselves to not only be the most innovative, dynamic and intelligent star in world cricket, but also somebody who has the ability to engage and excite spectators of all ages in different formats of the game. They must also have conducted themselves in a positive manner both on and off the field.

Please post your vote for our Sachin here: http://icc-cricket.yahoo.net/events_and ... submit.php

Thanks


Offline
Profile 
 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic
 Page 2 of 7  [ 99 posts ]  »

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


Posting Rules
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum


Forum Rules


Search for:
Jump to: